பாரி பாரி என்று பல ஏத்தி - புறநானூறு
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"
---- புறநானூறு 107.
பாடற் குறிப்பு :
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : பறம்பு நாட்டு மன்னன் வள்ளல் வேள் பாரி.
இப்பாடலில் பாரியின் வள்ளன்மையைத் திறம்பட உலகோர்க்கு உரைக்கிறார் கபிலர். எளிய வரிகளில் வளமான பொருள் இப்பாடலின் சிறப்பு.
பாடற் பொருள் : பாரி பாரி என்று பலவாறு உயர்த்தி, வள்ளன்மைக்குப் பாரி ஒருவனையே செவ்விய மொழி ஆளுமை பெற்ற புலவர் பெருமக்கள் (செந்நாப் புலவர்) புகழ்வர். வள்ளன்மையால் உலகைக் காக்க (புரப்பது) பாரி ஒருவன் மட்டுமல்லன், மழையும் (மாரியும்) இங்கு உண்டே !
பின் குறிப்பு :
உலகில் எடுத்துக்காட்டாய் நிற்கும் நட்புகளில் கபிலர் - பாரி நட்பும் ஒன்று. இப்பாடலில், "பாரி மட்டும்தானா வள்ளல் ? மழையும் தான் உண்டு" என்று பாரியை இகழ்வது போல் தொனிக்கிறது; ஆனால் உண்மையில், பாரியின் வள்ளன்மைக்கு நிகர் மழையே என்று மறைமுகமாகப் புகழ்கிறார். ஆதலின் ஈது 'இகழ்தல் போல் புகழும்' வஞ்சப்புகழ்ச்சியானது.
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"
---- புறநானூறு 107.
பாடற் குறிப்பு :
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : பறம்பு நாட்டு மன்னன் வள்ளல் வேள் பாரி.
இப்பாடலில் பாரியின் வள்ளன்மையைத் திறம்பட உலகோர்க்கு உரைக்கிறார் கபிலர். எளிய வரிகளில் வளமான பொருள் இப்பாடலின் சிறப்பு.
பாடற் பொருள் : பாரி பாரி என்று பலவாறு உயர்த்தி, வள்ளன்மைக்குப் பாரி ஒருவனையே செவ்விய மொழி ஆளுமை பெற்ற புலவர் பெருமக்கள் (செந்நாப் புலவர்) புகழ்வர். வள்ளன்மையால் உலகைக் காக்க (புரப்பது) பாரி ஒருவன் மட்டுமல்லன், மழையும் (மாரியும்) இங்கு உண்டே !
பின் குறிப்பு :
உலகில் எடுத்துக்காட்டாய் நிற்கும் நட்புகளில் கபிலர் - பாரி நட்பும் ஒன்று. இப்பாடலில், "பாரி மட்டும்தானா வள்ளல் ? மழையும் தான் உண்டு" என்று பாரியை இகழ்வது போல் தொனிக்கிறது; ஆனால் உண்மையில், பாரியின் வள்ளன்மைக்கு நிகர் மழையே என்று மறைமுகமாகப் புகழ்கிறார். ஆதலின் ஈது 'இகழ்தல் போல் புகழும்' வஞ்சப்புகழ்ச்சியானது.
This comment has been removed by the author.
ReplyDeleteஇப்பாடல் புறநானூறு 107.
Delete