கம்பனும் திருத்தக்க தேவரும்
பாலகாண்டத்தில் கோசல நாட்டின் மருத நில வருணனையில் நம்மைக் கிறங்க அடிக்கிறான் கம்பன் : "தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க தெண்டிரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ" பொருள் : குளிர்ச்சி பொருந்திய நிலத்தில் (தண்டலை - தண் தலை) - அஃதாவது சோலையில் - மயில்கள் ஆடுகையில், தாமரையாகிய விளக்குகள் ஒளிர்ந்து நிற்க, மேகங்கள் (கொண்டல்கள்) முரசொலிக்க (முழவின் ஏங்க), குவளையாகிய கண்கள் விழித்து நோக்க, தெள்ளிய நீரலைகள் (தெண்டிரை - தெண் திரை) திரைச் சீலையாய்த் திகழ (எழினி காட்ட), தேனைப் பிழிந்தெடுத்த (தேம் பிழி) இனிமை(சுவை)யொத்த மகர யாழின் இசை போன்று வண்டுகள் இனிமையாய்ப் பாட, மருத நிலமகள் வீற்றிருக்கின்றாள். கம்பனின் மேற்கூறிய இயற்கை வருணனை சீவக சிந்தாமணியின் கேமசரியார் இலம்பகத்தில் 1417 ஆம் பாடலை நினைவுறுத்துகிறது : "சுனைகள் கண்களாகச் சூழ்ந்த குவளை விழியா வனையலாகா உருவ நோக்கி மைந்தற் கிரங்கி இனைவ போலும் வரையின் அருவி ......