Posts

சிலைகொள் நாணின் - சீவக சிந்தாமணி

 "சிலைகொள் நாணின் தீராத் திருந்து கற்பின் அவர்தம் இலைகொள் பூந்தார் உழுத இன்ப வருத்தம் நீங்க முலைகொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன் மலைகொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்". ----சீவக சிந்தாமணி, பாடல் 1413. பாடல் விளக்கம் :-  (பதுமையைப் பிரிந்த சீவகன்) "மலைசூழ்ந்த கானகத்தின் வழியே உற்சாகமாகச் செல்கிறான்" ("மலை கொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்"). எத்தகைய சீவகன் என்று திருத்தக்க தேவர் நீண்ட விளக்கம் தருகிறார் : "வில்லில் பொருத்திய நாண்  போன்று (சிலைகொள் நாணின்) உறுதியான கற்புத்திறம் வாய்ந்த (தீராத்திருந்து கற்பின்) அவளது (அவர்தம் - பதுமையின்) இலைகளும் மலர்களும் கொண்டு அணிந்த மாலையினைத் (இலைகொள் பூந்தார்) தனது மார்பினால் உழுத இன்ப வருத்தம் நீங்க (to relax a bit from the joyful pain) சற்று விலகி, அவளது முலையின் கண்களைக் கண்ணாரக் கண்டு ரசித்து (முலையின் கண்கள் கண்ணின் எழுதி) மீண்டும் தழுவும் (முள்கும்) பேராற்றல் மிக்கவன் (மொய்ம்பன்)".

Sterlite struggle - வளர்ந்து வா மகனே !

  வளர்ந்து வா மகனே! நீயே இப்போது விடிவெள்ளி. நீயென்பது ஓட்டுக் கட்சிகளால் இன்னும்  மூளைச்சலவை செய்யப்படாத உன் தலைமுறையினர். நாங்கள் பாசிசவாதிகளையும் அடிமைகளையும் என்றுமே நம்பியதில்லை; அதனால் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒட்டுப் போட்ட  திராவிடக் கட்சி, நொண்டி நோக்காடான இடதுசாரிகள் என்று நம்பி ஏமாந்து போகிறோமே எங்களுக்கான நீதியை நீதானடா வழங்க வேண்டும். ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் பாமர மனம் நம்பிக்கையை வேறு எதிலாவது ஏற்றுகிறது. அப்படித்தான் இப்போது நீ கிடைத்திருக்கிறாய் மகனே ! நாங்கள் பெரும் விவேகிகள் என்று நினைத்தவர்கள் எல்லாம் சமாளிப்பு மன்னர்கள் என்று உணர எங்களுக்கு இத்தனை நாட்களா? அவரவர் கட்சிக்கு வாழ்க்கைப்பட்டு  விட்டார்களாம். எங்களைப் போன்ற  டியூப் லைட்டுகளைப் பார்த்து அந்தக் கொள்கைக் குன்றுகள் எள்ளி நகையாடுவது உன் காதுகளில் விழ வேண்டும். அந்தப் பதினான்கு உயிர்களின் ஓலத்தில் எங்கள் காது கிழிகிறதடா. அவர்களைச் சுட்டவன் எவன், சுடச் சொன்னவன் எவன் என்ற கேள்வியை இந்த அதிமேதாவிகள் யாரும் இன்று வரை கேட்கவில்லை. நியாயம்தானே! இவர்கள் ஆட்சிக் காலத்திலும் மக்களைச்

தமிழ்த்தாய் வாழ்த்து

Image
பொருள் : நீர் நிறை கடலினை உடுத்தியவள் நிலமாகிய மடந்தை; அவளது எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த முகமாகத் திகழ்வது பாரத துணைக் கண்டம்; அந்த எழில் முகத்திற்குத் தகுதியான சிறிய பிறை போன்ற நெற்றியே தென்னாடு (தெக்கணம் - தென்னிந்தியா); அந்நெற்றியில் வாசனைப் பொருட் கலவையினால் இட்ட திலகமே (பொட்டு) தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); அத்திலகத்தின் வாசனை எங்கும் பரவி இன்பம் பயப்பது போல், எல்லாத் திசைகளிலும் புகழ் மணம் பரவி நிற்கும் தமிழ்ப் பெண்ணே ! பல்வகை உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அழித்தாலும் ஒரு எல்லையில்லாத பரம்பொருள் முன் இருந்தபடியே இருக்கவல்லது; அப்பரம்பொருளைப் போலவே கன்னடம், இன்பத் தெலுங்கு, இனிய  மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழணங்காகிய உன் வயிற்றில் உதித்துப் பலவாக ஆனாலும், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போனதைப் போல் அல்லாமல் என்றும் சிதையாத உன் சீரும் சிறப்பும் வாய்ந்த இளமைத் திறத்தை வியந்து, அவ்வியப்பில் வேறு  செயலற்று உன்னை வாழ்த்தி அமைகிறோம். பின்குறிப்பு : நிலத்தை மடந்தையாகவும், பாரத நாட்டை அவளது எழில் முகமாகவும், தென்னாட்டை அவளது நெற்றியாகவும், தமிழ

மீண்டார் என உவந்தேன் - திருக்கோவையார்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே". ----- திருக்கோவையார், பாடல் 244. பாடற் குறிப்பு : பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் எட்டாம் திருமுறையாக அமைந்தன. திருக்கோவையாரில் 244 ம் பாடலே நாம் இன்று எடுத்தோதுவது. இப்பாடல் நாயகன் - நாயகி பாவத்தில் அமைந்த அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம். பாடியவர் ஆணானாலும் பெண்ணானாலும் தம்மைத் தலைவியாகவும் தம் இறைவனைத் தலைவனாகவும்  மனதில் வரிந்து பாடும் மரபு (genre) நாயகன் - நாயகி பாவம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இப்பாடலில் சங்க கால முறைமையின் வழி, தலைவனுடன் களவொழுக்கம் கொண்ட தலைவி அவனுடன் உடன்போக்கு மேற்கொண்டு செல்கிறாள். அவர்களைத் தேடி அழைத்து வர தலைவியின்  செவிலித்தாய் (Foster mother) எதிர் வருவோரை விசாரித்தவாறு செல்கிறாள். தூரத்தில் இதே போல் உடன்போக்கு மேற்கொண்டு வரும் தலைவன் - தலைவியைப் பார்த்து, தன் மக்கள்தானோ என  முதலில் மயக்கம் க

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் - திருத்தாண்டகம்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே". -------ஆறாம் திருமுறை, (திருவாரூர்) திருத்தாண்டகம், பாடல் 7. பாடற் குறிப்பு : பன்னிரு திருமுறைகளில் 4,5,6 திருமுறைகள் திருநாவுக்கரசருக்கு உரியவை. 6 ம் திருமுறையில் 25 ம் பகுதியான (திருவாரூர்) திருத்தாண்டகத்தில் பாடல் 7 நாம் தற்போது எடுத்துள்ளது. இப்பாடல் நாயகன் - நாயகி பாவத்தில் அமைந்த அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம். பாடியவர் ஆணானாலும் பெண்ணானாலும் தம்மைத் தலைவியாகவும் தம் இறைவனைத் தலைவனாகவும் (இங்கு திருவாரூர் இறைவனாகிய சிவபெருமானை) மனதில் வரிந்து பாடும் மரபு (genre) நாயகன் - நாயகி பாவம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இப்பாடலில் சங்க கால முறைமையின் வழி, தலைவனுடன் களவொழுக்கம் கொண்ட தலைவி அவனுடன் உடன்போக்கு மேற்கொண்டு செல்கிறாள்; தலைவியின் நிலையை அவளது செவிலித்தாய்க

மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பிம துசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்" -----நாச்சியார் திருமொழி, வாரணம் ஆயிரம், பாடல் 6. பாடற் குறிப்பு : நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கண்ணனைத் தன் தலைவனாய் மனதில் வரிந்து உருகிய இறைநிலைக் காதலே பாடு பொருளானது. அதில் 'வாரணம் ஆயிரம்' எனும் ஆறாம் திருமொழியில், இவர்களது திருமணக் கோலாகலம் ஆண்டாள் நாச்சியாரின் கற்பனையில் விரிகிறது. மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பமாகும் 'வாரணம் ஆயிரம்' இந்த ஆறாம் பாடலில், நாயகன் நாயகியின் கரம் பற்றும் அந்த சரியான தருணத்தைப் படம் பிடிக்கிறது. பாடற் பொருள் : மத்தளங்கள் கொட்டுகின்றன; வரிசங்குகள் (சங்குகளில் ஒரு வகை - வரிகள் உள்ளவை) முழங்குகின்றன; முத்துக்கள் உடைய மாலைகள் (தாமம்) வரிசையாய் (நிரை), நீளமாய்த் தொங்கும் அளவு கட்டப்பட்ட  (தாழ்ந்த) பந்தலின் கீழ், மைத்துனன் (அப்போது தன் தலைவனைத் தலைவி குறிக்கும் முறை) நம்பி மதுசூதனன் வந்து என் கரம் (கைத்தலம் - கை+தலம்) பற்றுவதாய் நான் கனாக் கண்டேன் (க

கூறும் நாவே முதலாக - குழைத்த பத்து - திருவாசகம்

"கூறும் நாவே முதலாகக்     கூறுங் கரணம் எல்லாம்நீ தேறும் வகைநீ திகைப்பும்நீ     தீமை நன்மை முழுதும்நீ வேறோர் பரிசிங் கொன்றில்லை     மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் தேறும் வகைஎன் சிவலோகா     திகைத்தால் தேற்ற வேண்டாவோ". பாடற் குறிப்பு : பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது; 51 பகுதிகளைக் கொண்டது; 33 ம் பகுதியான 'குழைத்த பத்து' வில் பாடல் 5 தற்போது நாம் எடுத்துள்ள பாடல். பாடற் பொருள் : 'அனைத்தும் நீயே' எனும் சரணாகதி நிலையில் இறைவனிடம் நிற்கும் பாடல். "சொல்லும் சொல் (கூறும் நா) முதற்கொண்டு செய்யும் செயல் (கூறுங் கரணம்) அனைத்தும் நீ ! எனது தெளிவும் (தேறும் வகை நீ), தெளியாத எனது குழப்பமும் (திகைப்பும்) நீ ! எனது தீமை, நன்மை முழுதும் நீ (எனது தீச்செயல், நற்செயல் அனைத்தையும் ஆற்றுபவன் நீ) ! உனையன்றி வேறோர் பரிசு எனக்கு இங்கு ஏதுமில்லை. மெய்ப்பொருளான உன்னை விரிவாக விளக்க முற்பட்டால், நான் தேறுவேனா ? (தேறும் வகை என்?) (அதாவது, உன்னை முழுமையாக விரித்துரைக்கும் அளவு நான் விளக்கம் பெற்றவனா?). என் சிவலோகனே ! அச்சமயத்த