வஞ்சப் புகழ்ச்சி
சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் இந்திரா காந்தி அரசின் கொடுமையான மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி தாடை எலும்பு நொறுங்கியதில் அவருக்கு நிரந்தரமாக தாவாய் சிறிதளவு கோணலானதைக் கிண்டல் செய்யும் அநாகரிகத்தை அரங்கேற்றியிருந்தார். போரில் பட்ட விழுப்புண் பெருமை உடைத்தேயன்றி, வீரனை நாணுறச் செய்வதில்லை எனும் அடிப்படைப் புரிதலின்றி விஜய் செய்த ஈனச் செயல் சட்டமன்ற மாண்பிற்கு ஒரு புதிய சரிவு (a new low). எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி அவரது கூட்டணிக் கட்சியினரின் கண்டனத்திற்கும் ஆளான சிறுமை பெற்ற முதல்வரானார் விஜய். ஆனாலும் இதனை நேர்மறையாய்க் காணவும் வழியுண்டு (கருமம்டா சாமி) !. ஸ்டாலின் அவர்களை சிறுமைப்படுத்துவதாய் நினைத்துப் பெருமைப்படுத்திவிட்டார் விஜய் எனக் கொள்ளலாம். மிசா சட்டத்தின் கொடுமை அறியாதோரும் தேடிப்பார்த்து, அதனை எதிர்த்துப் போராடிய களத்தில் ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பும் உலகோர் அறியலாயிற்று. புலவன் ஒருவன் தலைவன் ஒருவனைத் தான் அறிந்தே, இகழ்வது போல் புகழ்தலும் புகழ...