கண்டனென் கற்பினுக்கு அணியை
கண்டனென் கற்பினுக்கு அணியை பொதுவாக ஒரு அலுவல் மேற்கொண்டு முயற்சி செய்தவர் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ திரும்பி வந்து நம்மிடம் அச்செயல் நிகழ்வு பற்றிக் கூறத் தொடங்குகையில், "சென்ற காரியம் காயா பழமா என்று முதலில் சொல்" என்று அவரிடம் கேட்பது இயல்பான ஒன்று. அவரே முடிவினை அறிவித்துவிட்டு நிகழ்வு பற்றி நீட்டி முழக்குவது சிறப்பு. அதைத்தான் கம்பனின் அனுமன் செய்கிறான். அன்றைய உபந்நியாசகர்கள் முதல் இன்றைய சொற்பொழிவாளர்கள் வரை இலங்கை சென்று மீண்ட அனுமன் ராமனிடம், "கண்டேன் சீதையை" (கண்டனன் கற்பினுக்கு அணியை) என்று ஆரம்பித்த விதத்தை அழுத்தமாகத் சொல்லத் தவறுவதில்லை. அதிலும் " 'சீதையைக் கண்டேன்' என்றில்லாமல் 'கண்டேன் சீதையை' என்று தொடங்கி ராமனை முதலில் ஆறுதல் படுத்தினான் அனுமன்" என்றும் சிலாகிப்பர். "கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் தெண்டிரை அலை கடல் இலங்கைத் தென்னகர் அண்டர்நாயக இனி துறத்தி ஐயமும் பண்டுள துயரும் என்றனுமன் பன்னுவான்" பொருள் : கற்பினுக்கு அணியினை (சீதையை) என் கண்களால் கண்டேன் - தெள்ளிய அலைகளை உடைய கடல் (தெண் த...