இன்று போய் நாளை வா
இன்று போய் நாளை வா 03-09-2026 (வியாழன்) அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரால் உடனடியாகப் பதிலுரைக்க இயலாவிட்டால், வரும் திங்கட்கிழமை வரை சட்டமன்றத்திற்கு விடுமுறையாததால் அவர் பதில்களை நன்றாகத் தயாரித்து திங்கட்கிழமை அன்று உரைக்கலாம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெளிவு படுத்தினார். எனவே விஜய் சட்டமன்றத்தை விட்டு உடனடியாக ஓட வேண்டிய அவசியமில்லாதபோதும் ஓடினார். சினிமா கதாநாயகன் பாணியில், தாம் அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாகப் பதிலிறுக்கும்போது யாரும் பயந்து அன்று சட்டமன்றத்தை விட்டு ஓடி விட வேண்டாம் என்று அதிகப் பிரசங்கித்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் கேட்டுக் கொண்டு அப்போது ஓடினார். உதயநிதி அவர்கள் விஜய்க்குக் கால அவகாசம் கொடுத்ததும் விஜய் சட்டமன்றத்தை விட்டு உடனே நீங்கியதும் கம்பராமாயணத்தில் "இன்று போய் நாளை வா" என்று இராவணனுக்கு இராமன் அவகாசம் கொடுத்ததையும் அன்றைய போரில் தோற்ற இராவணன் போர்க்களம் நீங்கியதையும் நினைவுறுத்தலைத் தவிர்க்க இயலவில்லை. ...