Posts

அண்ணா திராவிட நாடு உரை

 தமிழ்நாடு மாநிலமாக அமைந்த நாளைப் பற்றி அறிஞர் அண்ணா நவம்பர் 4, 1956ல் திராவிட நாடு இதழில் எழுதிய கடிதம் இது. அறிஞர் அண்ணாவின் கடிதம்! தம்பி! தமிழகம் திருநாள் கொண்டாடுகிறது - தாயகம் விழாக் கோலம் பூண்டிருக்கிறது - திருநாட்டைப் பெற்றோம், இனி இதன் ஏற்றம் வளரத்தக்க வகையிலே பணிபுரிதலே நமது தலையாய கடன் என்று, தமிழ்ப் பெருங்குடி மக்களெல்லாம் உறுதி கொண்டிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது - கொடியும், படையும், முரசும் அரசின் முறையும் வேறு வேறு எனினும், எல்லா முற்போக்குக் கட்சிகளும், தாயகத்தின் திருவும் திறனும் செழித்திடப் பணியாற்ற வேண்டும் என்பதிலே, முனைந்து நிற்கின்றன - புதிய தமிழகம் கண்டோம், இது புதியதோர் உலகிலே உரிய இடம் பெற்றுத் திகழ்ந்திட வேண்டும் - நாம் அனைவரும் அதற்கான வழியிலே தொண்டாற்றும் திறன் பெறல் வேண்டும் என்ற ஆர்வம் மலர்ந்திருக்கிறது. நவம்பர் திங்கள் முதல் நாள், புதிய தமிழகம் உருவாகிறது. ஓர் அரை நூற்றாண்டுக் காலமாக, அரசியல் தெளிவும் நாட்டுப் பற்றும் கொண்டோரனைவரும், நடத்தி வந்த இலட்சியப் பயணம், தடைபல கடந்து படை பல வென்று ஆயாச அடவிகளையும், சஞ்சலச் சரிவுகளையும் கடந்து வெற்றிக் கதிர...

திராவிடம் - பேரா.த.செயராமன்

           திராவிடம்                    - பேரா.த.செயராமன் மனோன்மணியம் சுந்தரனார் மிகச் சிறந்த தமிழறிஞர்; முன்னோடியான மெய்யியலாளர். மொழியியல் அறிவும், மாந்தவியல் அறிவும், வரலாற்று அறிவும், கல்வெட்டியல் அறிவும், ஆராய்ச்சியும், இவை குறித்த குறிப்பிடத்தக்க பங்களிப்பும் உள்ள, அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட பேரறிஞர். மறைமலை அடிகள் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்வதற்கு பரிந்துரையும் வழங்கியவர் சுந்தரனார் தான்.   தமிழ் இலக்கியங்களில் உள்ள "தமிழ்நாடு " குறித்த பதிவுகள் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் மனோன்மணியம் நாடகத்தில் எழுதியுள்ள தமிழணங்கு வாழ்த்தில் "திராவிட நல் திருநாடு" என்று ஏன் குறிப்பிட்டு இருக்கிறார்?  அவர் என்ன பொருளில் குறிப்பிடுகிறார் என்பதே அறியாமல் சிலர் விமர்சிக்கிறார்கள்.  1890 's என்பது திராவிட இன உணர்வு  மிகுந்தவளர்ச்சி பெற்ற காலகட்டம். 1892 -இல் இப்பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எழுதுகிறார். 1890-இல், அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபாவை உருவாக்குகிறார...

மனிதத்தின் அழகியல் அழகேசனார்

Image
                                      மனிதத்தின் அழகியல் அழகேசனார்                                                                                               -  சுப.சோமசுந்தரம்                            பேரா. அழகேசன் அவர்களுடன் பணிசெய்யக் கிடைத்தமை யாம் பெற்ற பேறு எனில், அவ்வாய்ப்பு குறுகிய காலத்திற்கே கிட்டியமை எம் பெருங்குறை. அந்நல்லாரைக் காண்பதும், நலம் மிக்க அவர்சொல் கேட்பதும், அவர்தம் புகழுரைப்பதும், அவரோடு இணங்கி இருப்பதும் நம் அனைவருக்கும் நன்றே. ‘நல்லார்’ எனும் அவர் பண்பினையும் ‘சான்றோர்’ எனும் அவர் சீர்மையினையும் சீர்தூக்குங்கால், முன்னம் பேசப்பட வேண்டியது அவர்தம் பண்பே...

சிலைகொள் நாணின் - சீவக சிந்தாமணி

 தினம் ஒரு தமிழ்ப் பாடல்                      -  சுப.சோமசுந்தரம் "சிலைகொள் நாணின் தீராத் திருந்து கற்பின் அவர்தம் இலைகொள் பூந்தார் உழுத இன்ப வருத்தம் நீங்க முலைகொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன் மலைகொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்". ----சீவக சிந்தாமணி, பாடல் 1413. பாடல் விளக்கம் :-  (பதுமையைப் பிரிந்த சீவகன்) "மலைசூழ்ந்த கானகத்தின் வழியே உற்சாகமாகச் செல்கிறான்" ("மலை கொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்"). எத்தகைய சீவகன் என்று திருத்தக்க தேவர் நீண்ட விளக்கம் தருகிறார் : "வில்லில் பொருத்திய நாண்  போன்று (சிலைகொள் நாணின்) உறுதியான கற்புத்திறம் வாய்ந்த (தீராத்திருந்து கற்பின்) அவளது (அவர்தம் - பதுமையின்) இலைகளும் மலர்களும் கொண்டு அணிந்த மாலையினைத் (இலைகொள் பூந்தார்) தனது மார்பினால் உழுத இன்ப வருத்தம் நீங்க (to relax a bit from the joyful pain) சற்று விலகி, அவளது முலையின் கண்களைக் கண்ணாரக் கண்டு ரசித்து (முலையின் கண்கள் கண்ணின் எழுதி) மீண்டும் தழுவும் (முள்கும்) பேராற்றல் மிக்கவன் (மொய்ம்பன்)".

Sterlite struggle - வளர்ந்து வா மகனே !

  வளர்ந்து வா மகனே! நீயே இப்போது விடிவெள்ளி. நீயென்பது ஓட்டுக் கட்சிகளால் இன்னும்  மூளைச்சலவை செய்யப்படாத உன் தலைமுறையினர். நாங்கள் பாசிசவாதிகளையும் அடிமைகளையும் என்றுமே நம்பியதில்லை; அதனால் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒட்டுப் போட்ட  திராவிடக் கட்சி, நொண்டி நோக்காடான இடதுசாரிகள் என்று நம்பி ஏமாந்து போகிறோமே எங்களுக்கான நீதியை நீதானடா வழங்க வேண்டும். ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் பாமர மனம் நம்பிக்கையை வேறு எதிலாவது ஏற்றுகிறது. அப்படித்தான் இப்போது நீ கிடைத்திருக்கிறாய் மகனே ! நாங்கள் பெரும் விவேகிகள் என்று நினைத்தவர்கள் எல்லாம் சமாளிப்பு மன்னர்கள் என்று உணர எங்களுக்கு இத்தனை நாட்களா? அவரவர் கட்சிக்கு வாழ்க்கைப்பட்டு  விட்டார்களாம். எங்களைப் போன்ற  டியூப் லைட்டுகளைப் பார்த்து அந்தக் கொள்கைக் குன்றுகள் எள்ளி நகையாடுவது உன் காதுகளில் விழ வேண்டும். அந்தப் பதினான்கு உயிர்களின் ஓலத்தில் எங்கள் காது கிழிகிறதடா. அவர்களைச் சுட்டவன் எவன், சுடச் சொன்னவன் எவன் என்ற கேள்வியை இந்த அதிமேதாவிகள் யாரும் இன்று வரை கேட்கவில்லை. நியாயம்தானே! இவர்கள் ஆட்சி...

தமிழ்த்தாய் வாழ்த்து

Image
பொருள் : நீர் நிறை கடலினை உடுத்தியவள் நிலமாகிய மடந்தை; அவளது எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த முகமாகத் திகழ்வது பாரத துணைக் கண்டம்; அந்த எழில் முகத்திற்குத் தகுதியான சிறிய பிறை போன்ற நெற்றியே தென்னாடு (தெக்கணம் - தென்னிந்தியா); அந்நெற்றியில் வாசனைப் பொருட் கலவையினால் இட்ட திலகமே (பொட்டு) தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); அத்திலகத்தின் வாசனை எங்கும் பரவி இன்பம் பயப்பது போல், எல்லாத் திசைகளிலும் புகழ் மணம் பரவி நிற்கும் தமிழ்ப் பெண்ணே ! பல்வகை உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அழித்தாலும் ஒரு எல்லையில்லாத பரம்பொருள் முன் இருந்தபடியே இருக்கவல்லது; அப்பரம்பொருளைப் போலவே கன்னடம், இன்பத் தெலுங்கு, இனிய  மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழணங்காகிய உன் வயிற்றில் உதித்துப் பலவாக ஆனாலும், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போனதைப் போல் அல்லாமல் என்றும் சிதையாத உன் சீரும் சிறப்பும் வாய்ந்த இளமைத் திறத்தை வியந்து, அவ்வியப்பில் வேறு  செயலற்று உன்னை வாழ்த்தி அமைகிறோம். பின்குறிப்பு : நிலத்தை மடந்தையாகவும், பாரத நாட்டை அவளது எழில் முகமாகவும், தென்னாட்டை அவளது நெற்றியாகவ...

மீண்டார் என உவந்தேன் - திருக்கோவையார்

தினம் ஒரு தமிழ்ப் பாடல்                    - சுப.சோமசுந்தரம் "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே". ----- திருக்கோவையார், பாடல் 244. பாடற் குறிப்பு : பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் எட்டாம் திருமுறையாக அமைந்தன. திருக்கோவையாரில் 244 ம் பாடலே நாம் இன்று எடுத்தோதுவது. இப்பாடல் நாயகன் - நாயகி பாவத்தில் அமைந்த அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம். பாடியவர் ஆணானாலும் பெண்ணானாலும் தம்மைத் தலைவியாகவும் தம் இறைவனைத் தலைவனாகவும்  மனதில் வரிந்து பாடும் மரபு (genre) நாயகன் - நாயகி பாவம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இப்பாடலில் சங்க கால முறைமையின் வழி, தலைவனுடன் களவொழுக்கம் கொண்ட தலைவி அவனுடன் உடன்போக்கு மேற்கொண்டு செல்கிறாள். அவர்களைத் தேடி அழைத்து வர தலைவியின்  செவிலித்தாய் (Foster mother) எதிர் வருவோரை விசாரித்தவாறு செல்கிறாள். தூரத்தில் இதே போல் உடன்போக்க...