வேவத் திரிபுரம் சென்ற வில்லி
தினம் ஒரு தமிழ்ப் பாடல் : நேற்றைய பாடலில் நாவுக்கரசர் திருவையாறு பதிகத்தில் சைவ நெறி உணர்வால் எந்த வேறுபாடும் கொள்ளாமல் பன்றியை ஏனைய விலங்குகளோடு சமநிலை பாராட்டியதைக் கண்டோம். அதே போன்று மாணிக்கவாசகர் திருவாசகத்தின் திருவார்த்தை பதிகத்தில் பன்றியைப் பேணுதல் காணலாம். "வேவத் திரிபுரம் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதிஅன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம்பி ரானாவாரே" பொருள் விளக்கம் : திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்து அழிய; செற்ற வில்லி - போரிட்ட வில்லினையுடைய; எந்தை - என் தந்தையாகிய; பெருந்துறை ஆதி - திருப்பெருந்துறை முதல்வன்; ஏவல் செயல் செய்யும் - இட்ட பணியினைச் செய்யும்; தேவர் முன்னே - தேவர்கள் முன் செல்ல; எம்பிரான் தான் வேடுவனாய் - என் பிரானாகிய சிவன் தான் வேடனாக; கடி நாய்கள் சூழ - கடிக்கும் நாய்கள் சூழ்ந்து வர; இயங்கு காட்டில் - வலம் வந்த காட்டில்;...